Wednesday, July 23, 2025

Top 5 This Week

Related Posts

கூகுள் பண்ணி பாருங்க; செய்தியாளர்களுக்கு சொன்ன பும்ரா: சுந்தர் பிச்சை அளித்த பதில்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருவதுடன், மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காபாவில் நடைபெற்றது.

இந்தப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா செய்தியாளர்களை சந்தித்து கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இந்திய அணி பேட்டிங் குறித்த கேள்விக்கு பதில் அளித்த பும்ரா, “நீங்கள் என் பேட்டிங் திறமை பற்றி கேள்வி எழுப்பியுள்ளீர்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்களை அடித்த வீரர் நான் தான். இதுபற்றி கூகுளை பயன்படுத்தி அறிந்துகொள்ளுங்கள்” என்றார்.

கூகுள் பண்ணி பாருங்க

இதற்கு பதிலளித்துள்ள, கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை எக்ஸ் தள பதிவில், “நான் கூகுள் செய்தேன். கம்மின்ஸ் பந்தில் சிக்சர் விளாசுபவர் யாராக இருந்தாலும் அவருக்கு நிச்சயம் பேட்டிங் தெரியும். ஆகாஷ் தீப் உடன் இணைந்து ஃபாலோ ஆன்-ஐ தடுத்த விதம் நன்றாக இருந்தது ” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, சுந்தர் பிச்சையின் எக்ஸ் பதிவுக்கு பதில் அளித்த எலான் மஸ்க், “அருமை” என்று பதில் அளித்து இருந்தார்.

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here

Popular Articles