Wednesday, July 23, 2025

Top 5 This Week

Related Posts

சாம்பியன்ஸ் டிராபி தொடர்: முக்கிய வீரர் திடீர் விலகல்

சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19ம் தேதி தொடங்கி மார்ச் 9ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் அடுத்த மாதம் 21-ம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியுடன் சாம்பியன்ஸ் டிராபி தொடரை தென் ஆப்பிரிக்க அணி தொடங்குகிறது.

தென் ஆப்பிரிக்க அணியை பவுமா வழிநடத்துகிறார். இதில் இந்தியாவில் நடந்த ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில பங்கேற்ற 10 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர், இந்த அணியில் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் போன்றோர் இடம் பெற்றிருந்தனர்.

டோனியர் டி சோர்சி மற்றும் ரியான் ரிக்கெல்டன் போன்ற புதுமுகங்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த வீரர்கள் தென் ஆப்ரிக்காவின் அணியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ஜே திடீரென விலகியுள்ளார்.
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here

Popular Articles