Connect with us
Tuesday, April 21, 2026

வீட்டிற்கு வந்த விருந்தாளிக்கு காளான் சூப் கொடுத்து நர்ஸ் செய்த வேலை

காளான் சூப்

சென்னையில் நிகழ்ந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சுனிதா, தன்னுடன் பணிபுரியும் நர்ஸ் நான்சி நிஷாவின் வீட்டிற்கு விருந்தாளியாக சென்றுள்ளார். இருவரும் ஒரே இடத்தில், அதாவது எலும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை-யில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

வீட்டிற்கு வந்த சுனிதாவுக்கு நான்சி நிஷா காளான் சூப் வழங்கியுள்ளார். அந்த சூப்பை குடித்த சில நேரங்களில் சுனிதா மயக்க நிலைக்கு சென்றதாக தெரிய வந்தது. பின்னர் வீட்டிற்கு திரும்பிய சுனிதா, தனது 6 சவரன் தங்கச் செயின் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், நான்சி நிஷா காளான் சூப்பில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து சுனிதாவை மயக்கி, அவரது தங்கச் செயினை திருடியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் நான்சி நிஷாவை கைது செய்து, திருடப்பட்ட நகையை மீட்டனர்.

கனடா மாணவர் விசா விதிகளில் அதிரடி மாற்றம் – இனி என்ன செய்ய வேண்டும்?கனடா மாணவர் விசா விதிகளில் அதிரடி மாற்றம் – இனி என்ன செய்ய வேண்டும்?

மேலும், இதே நபர் கடந்த வாரம் மற்றொரு நர்ஸிடமும் இதேபோன்ற முறையில் திருட்டில் ஈடுபட்டதாகவும், அந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் நான்சி நிஷாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

To Top