ஆஸ்திரேலியாவின் பொண்டி கடற்கரையில் நடைபெற்ற தாக்குதலுக்குப் பின்னர், அந்நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வெறுப்பு சம்பவங்களை பதிவு செய்து வரும் அமைப்பு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த அமைப்பின் தகவலின்படி, இந்த வாரத்தில் மட்டும் முஸ்லிம் மக்களை இலக்காகக் கொண்ட 126 வெறுப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது, இரண்டு வாரங்களுக்கு முன் பதிவான எண்ணிக்கையை விட சுமார் 10 மடங்கு அதிகமாகும்.
ஆஸ்திரேலிய இமாம் மன்றம் வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சுவர் கிறுக்கல்கள், பள்ளிவாசல்களில் பன்றி இறைச்சி எறியப்பட்ட சம்பவங்கள், முஸ்லிம் மக்களை இழிவுபடுத்தும் வகையிலான செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இஸ்லாமிய சமயம் மற்றும் முஸ்லிம் சமூகத்தைப் பற்றிய தவறான மற்றும் வழிதவறிய தகவல்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருவதாக Australian Associated Press செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

