Connect with us
Tuesday, April 21, 2026

19 வயதில் 8 ஆண்களைத் திருமணம் செய்து பணம் பறித்த பெண் – ஆந்திராவில் அதிர்ச்சி மோசடி

திருமணம்

ஆந்திர பிரதேசம், ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தின் இச்சாபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது முத்திரெட்டி வாணி என்ற பெண், பணம் பறிக்கும் நோக்கில் கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 8 ஆண்களைத் திருமணம் செய்து மோசடி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இச்சாபுரத்தில் உள்ள துர்கா தேவி கோயிலில் வாணி, கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைத் திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பின்னர், அவர்கள் இருவரும் ரயில் மூலம் கர்நாடகாவுக்குச் செல்லத் தொடங்கினர். ஆனால், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் வந்தவுடன், கழிப்பறைக்குச் செல்வதாகக் கூறி வாணி ரயிலிலிருந்து இறங்கினார். அவர் மீண்டும் ரயிலில் ஏறவில்லை.

மணமகன் பதறி அவரைத் தேடியபோது, வாணி இச்சாபுரத்தில் உள்ள தனது அத்தை சத்யாவின் வீட்டில் இருப்பது தெரிய வந்தது. இதன்மூலம், திருமணம் முழுவதும் பணத்தைப் பறிக்கும் நோக்கில் நடத்தப்பட்டது என்பது வெளிப்பட்டது.

14 வயது சிறுவனிடம் 4 மாதங்களாக தகாத உறவு… இரு வாலிபர்கள் கைது!14 வயது சிறுவனிடம் 4 மாதங்களாக தகாத உறவு… இரு வாலிபர்கள் கைது!

மணமகன் தரப்பினர், திருமணத்திற்காக வாணியின் குடும்பத்துக்கு 1 லட்சம் ரூபாய் கொடுத்திருந்தனர். இந்த மோசடியை அடுத்து, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் என்னவென்றால், சிறுவயதிலே பெற்றோரை இழந்த வாணியை அவரது தாய்வழி அத்தை சத்யா வளர்த்து வந்துள்ளார். இந்த இருவரும் இணைந்து, பல ஆண்களைத் திருமணம் செய்து, அவர்களிடமிருந்து நகைகள் மற்றும் பணத்தைப் பறித்து மாயமாகியுள்ளனர்.

வாணி திருமணம் செய்த போது மைனர் (சிறுமி) என்பதால், அவரிடம் மோசடி நடந்ததாகப் புகார் அளித்தால், தாங்கள் மைனரைத் திருமணம் செய்ததற்காக சட்ட வழியில் பின்னடைவு ஏற்படும் என்பதால், முந்தைய பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை.

கொல்லப்பட்ட காதலனின் உடலைத் திருமணம் செய்த இளம்பெண் – மகாராஷ்டிராவில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம்கொல்லப்பட்ட காதலனின் உடலைத் திருமணம் செய்த இளம்பெண் – மகாராஷ்டிராவில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம்

இப்போது, நாகிரெட்டி மற்றும் கேசவ ரெட்டி ஆகிய இருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தற்போது வாணி மற்றும் அவரது அத்தை சத்யா ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். அவர்களைத் தேடி தனிப்படை காவல்துறை செயல்பட்டு வருகிறது.

To Top