அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது “அமெரிக்கா ஃபர்ஸ்ட்” கொள்கையை உலகளாவிய அளவில் வலுப்படுத்தும் நோக்கில், இராஜதந்திரத் துறையில் பெரும் மாற்றங்களை முன்னெடுத்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி சுங் உட்பட சுமார் 30 நாடுகளின் மூத்த தூதர்களை வெள்ளை மாளிகை திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ் நியமிக்கப்பட்ட தூதர்களை நீக்கி, ட்ரம்ப்பின் கொள்கைகளை ஆதரிக்கும் புதிய அதிகாரிகளை நியமிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. ஜனவரி மாதத்துடன் இந்த தூதர்களின் பதவிக்காலம் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகள் அதிக அளவில் இந்த மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், ஆசியாவில் இலங்கை, நேபாளம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஆறு நாடுகளும் இந்த புதிய இராஜதந்திர மறுசீரமைப்பின் கீழ் வந்துள்ளன.
இந்த திடீர் மாற்றம் உலக இராஜதந்திர வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இது சாதாரண நிர்வாக நடைமுறை என்று தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்





