ஜேர்மனி அரசு சமீபத்தில் கடுமையான புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இதன் ஒரு முக்கிய அம்சமாக, புகலிடக்கோரிக்கையாளர்களை ஜேர்மன் எல்லையிலேயே திருப்பி அனுப்பும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இருப்பினும், அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட நபர்களில் பலர் மீண்டும் ஜேர்மனிக்குள் நுழைந்து புகலிடம் கோரியுள்ளனர்.
ஜேர்மன் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்படி, மே 7, 2024 முதல் அக்டோபர் 31, 2024 வரையான காலப்பகுதியில் எல்லையில் திருப்பி அனுப்பப்பட்டவர்களில் சுமார் 1,600 பேர் மீண்டும் ஜேர்மனியில் புகலிடக்கோரிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இந்த மீள்கோரிக்கைகள், ஜேர்மனியின் புலம்பெயர்தல் கொள்கைகள் மீதான சவால்களையும், அவற்றைச் சுற்றியான சர்ச்சைகளையும் மீண்டும் முன்னிறுத்தியுள்ளன.

