ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்.. ரோகித் சர்மா செய்த மோசமான சாதனை!

ஐபிஎல்

ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த 3ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ய மும்பை இந்தியன் அணி முதலில் களமிறங்கி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கைள எடுத்தது.

ஆட்டத்தில் முதலாவதாக களமிறங்கிய ரோகித் சர்மா முதல் ஓவரின் 4வது பந்தில் டக் அவுட்டானார்.

இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான வரலாற்று சாதனையை மும்பை வீரர் ரோகித் சர்மா சமன் செய்தார்.

அதன்படி, மேக்ஸ்வெல் மற்றும் தினேஷ் கார்த்திக் உடன் ரோகித் சர்மா மோசமான இடத்தை சமன் செய்துள்ளார்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net