எகிப்தில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரச கல்லறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், கடைசியாக 1922ஆம் ஆண்டில் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது .
இந்தக் கல்லறை எகிப்தின் 18ஆம் அரச வம்சத்தைச் சேர்ந்த இரண்டாம் துட்மோஸுக்குச் சொந்தமானது என அந்நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கல்லறையில் அரசர், அவரது மனைவி ராணி ஹெட்ஷெப்சுட்டின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்ததை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுள்ளனர்.
நீல நிற எழுத்துகள் அடங்கிய களிமண், மஞ்சள் நட்சத்திரங்கள், சமயக் குறிப்புகள் போன்றவையும் கல்லறையில் காணப்பட்டன.
கல்லறை முறையாகப் பராமரிக்கப்படாததால் அதில் இருந்த பல பொருள்கள் அகற்றப்பட்டிருப்பதாகவும் அவற்றை மீட்கும் பணி தொடர்வதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
தந்தையின் கொடுமையை வெளிப்படுத்த வழிகாட்டிய ChatGPT: 17 வயது சிறுமி மீட்பு
மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் முடக்கம்!
சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் பிரித்தானியா; குடியேற்ற எதிர்ப்பு கலவரங்களை தொடர்ந்து அரசு அதிரடி!
19 ஆண்டுகள் தாமதமாக வந்த இதழ்: பிரித்தானிய தபால் சேவை ஏற்படுத்திய வியப்பூட்டும் சம்பவம்!
சமூக ஊடகங்களில் சட்டவிரோத விந்து தான சேவைகள்: பெண்களுக்கு கடும் எச்சரிக்கை
Powered By Infox Cloud⚡





