Connect with us
Wednesday, May 6, 2026
Home » அமெரிக்கா » வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு: பாதுகாப்பு பலப்படுத்தல், போக்குவரத்து தடை
Advertisement

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு: பாதுகாப்பு பலப்படுத்தல், போக்குவரத்து தடை

வெள்ளை மாளிகை

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே பாதுகாப்பு எச்சரிக்கை நிலை ஏற்பட்டுள்ளது. ஆயுதத்துடன் சந்தேகத்திற்கிடமாகச் சுற்றித் திரிந்த ஒருவரை கவனித்த அமெரிக்க ரகசிய சேவை அதிகாரி, அவசர சூழ்நிலையை முன்னிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மத்திய வாஷிங்டன் DC பகுதி உடனடியாக கடுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. வெள்ளை மாளிகை வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், அப்பகுதியில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

சம்பவம் நடைபெற்ற இடத்தைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் பொதுமக்கள் அந்தப் பகுதிக்கு வராமல் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியில் அதிகளவு வேலைவாய்ப்பு…. புலம்பெயர் பணியாளர்கள் அவசியம்: ஆனால் ஏற்பட்டுள்ள சிக்கல்!ஜேர்மனியில் அதிகளவு வேலைவாய்ப்பு…. புலம்பெயர் பணியாளர்கள் அவசியம்: ஆனால் ஏற்பட்டுள்ள சிக்கல்!

Advertisement
To Top