Connect with us
Friday, April 17, 2026

பிரித்தானியாவை மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைக்க முயற்சி? பிரதமர் மீது குற்றச்சாட்டு

Attempt to rejoin Britain with the European Union

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மீது, நாட்டை மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைக்க முயற்சி செய்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என முந்தைய அரசுகள் மக்களை தவறாக வழிநடத்தியதாக ஸ்டார்மர் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், யூகே ரீஃபார்ம் கட்சியின் தலைவர் நைஜல் ஃபராஜ் மற்றும் முன்னாள் உள்துறைச் செயலர் பிரீத்தி பட்டேல் ஆகியோர், ஸ்டார்மர் மீண்டும் பிரித்தானியாவை ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமாக இணைக்க முயற்சி செய்து வருகிறார் என குற்றம் சாட்டியுள்ளனர்.

ஸ்டார்மர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனை விமர்சித்த நைஜல் ஃபராஜ், பிரித்தானியாவை மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஸ்டார்மர் முயற்சி செய்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

கனடாவில் வாகன விபத்தில் யாழ்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் உயிரிழப்புகனடாவில் வாகன விபத்தில் யாழ்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் உயிரிழப்பு

அதேபோல், பிரீத்தி பட்டேலும், பிரித்தானியா மீது ஐரோப்பிய அமைப்புகள் இன்னும் பல துறைகளில் செல்வாக்கு செலுத்தி வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், பிரெக்சிட் முடிவை முழுமையாக செயல்படுத்த பிரித்தானியா மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய ஒப்பந்தத்திலிருந்து விலக வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

To Top