ஜோதிடக் கணிப்புகளின்படி, கிரகங்களின் இயக்கம் மனித வாழ்க்கையில் நேரடி மற்றும் மறைமுக தாக்கங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் நீதியின் சின்னமாக விளங்குபவர் சனி பகவான். மனம், உணர்ச்சி, எண்ணங்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர் சந்திரன். இந்த இரு கிரகங்களும் இயற்கையாகவே பரஸ்பரம் எதிர்மறை தன்மை கொண்டவை என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது.
சனி பகவான் சந்திரனை பார்ப்பதன் மூலம், சந்திரனின் சக்தி பாதிக்கப்படுவதாகவும், அதன் விளைவாக மனநிலை மாற்றங்கள், உணர்ச்சி குழப்பங்கள் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், ஜனவரி 27 ஆம் தேதி சந்திரன் மேஷ ராசியை விட்டு ரிஷப ராசிக்குள் பிரவேசிக்க உள்ளார். அப்போது சனி பகவான் மீன ராசியில் இருப்பதால், சனியின் மூன்றாம் பார்வை நேரடியாக சந்திரன் மீது விழும் நிலை உருவாகிறது.
இந்த கிரக அமைப்பு அனைத்து ராசிக்காரர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்கள் குறிப்பாக தொழில், ஆரோக்கியம் மற்றும் நிதி தொடர்பான விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என ஜோதிடர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ரிஷப ராசி
இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்கள் மனதளவில் சவால்களை சந்திக்கக்கூடும். எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்து, மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலைகளில் தாமதம், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் போன்ற சூழ்நிலைகள் உருவாகலாம். ஜனவரி 30 ஆம் தேதிக்கு முன் முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு இந்த சனி பார்வை உணர்ச்சிகளை அதிகமாக பாதிக்கக்கூடும். சிறு விஷயங்களுக்கே கோபம், பொறுமையின்மை போன்றவை அதிகரிக்கலாம். பணியிடத்தில் சாதகமற்ற சூழ்நிலைகள் உருவாகி, தன்னம்பிக்கை குறையும் வாய்ப்பு உள்ளது. இதனால் மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும் என்பதால், ஒவ்வொரு செயலிலும் மிகுந்த கவனமும் நிதானமும் தேவைப்படும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்களும் இந்த காலத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வேலை தொடர்பான இடையூறுகள் அதிகரித்து, கடின உழைப்புக்கான பலன் தாமதமாக கிடைக்கலாம். முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், பெரிய தீர்மானங்களை எடுத்துக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. மேலும் பேசும் வார்த்தைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்; இல்லையெனில் தவறான புரிதல்கள் உருவாகலாம்.
மேலே வழங்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் ஜோதிட அனுமானங்கள் மற்றும் பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் வழங்கப்பட்டவை. இந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே. எந்தவொரு முக்கிய முடிவுகளையும் எடுக்கும் முன் சம்பந்தப்பட்ட நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது அவசியம்.



