இங்கிலாந்தின் பிரதமர் கியர் ஸ்டார்மர், தனது தலைமையைப் பற்றி எழுந்துள்ள சந்தேகங்களைத் தெளிவாக மறுத்துள்ளார். அடுத்த ஆண்டிலும் தாமே பிரதமராக தொடருவேன் என உறுதியாகக் கூறிய அவர், அரசின் நிலைத்தன்மை குறித்து எந்த சந்தேகமும் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
மே மாதத்தில் நடைபெற உள்ள ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் இங்கிலாந்து உள்ளாட்சித் தேர்தல்கள், தனது அரசுக்கு எதிரான கருத்துக்கணிப்பாக பார்க்கப்படக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவை ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் தேர்தல்கள் மட்டுமே என அவர் விளக்கியுள்ளார்.
2025ஆம் ஆண்டில் பொருளாதார மந்தநிலை, மக்கள் ஆதரவு குறைவு போன்ற சவால்கள் இருந்தாலும், 2024ஆம் ஆண்டில் மக்களால் வழங்கப்பட்ட ஐந்தாண்டு ஆணையை முழுமையாக நிறைவேற்றுவேன் என்று கியர் ஸ்டார்மர் உறுதியளித்துள்ளார். அரசின் கொள்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், உயர்ந்து வரும் வாழ்வுச்செலவை குறைத்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான அரசின் முயற்சிகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

