கனடாவின் ரிச்மண்ட் ஹில் பகுதியில் கடந்த 18ஆம் திகதி மாலை வேளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்பாணத்தை பிறப்பிடமாகவும், கனடாவின் டொரோன்ரோவை வாழ்விடமாகவும் கொண்ட 65 வயதான இந்த நபர், இரு வாகனங்கள் மோதியதில் வீதியில் சென்று கொண்டிருந்த போது தாக்கப்பட்டார்.
இந்த மோதலில் இலங்கைத் தமிழர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்து உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் ஈடுபட்ட இரு வாகனங்களின் ஓட்டுநர்கள் காயமின்றி தப்பியுள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சாரதிகள் மதுபோதையில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, விபத்து தொடர்பான முழுமையான விசாரணை கனடா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள் பொலிஸ் விசாரணைகளுடன் முழுமையாக ஒத்துழைப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் கனடாவில் வாழும் இலங்கைத் தமிழ் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

