Connect with us
Monday, April 20, 2026

பிரித்தானியாவில் 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் – பதின்ம வயது சிறுவன் கைது

சிறுமி கொலை

பிரித்தானியாவின் சோமர்செட் மாகாணத்திலுள்ள வெஸ்டன் சூப்பர் மேர் நகரில் அதிர்ச்சியூட்டும் ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது. லைம் குளோஸ் (Lime Close) குடியிருப்பு பகுதியில் திங்கட்கிழமை மாலை 6.09 மணியளவில் அவசர அழைப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக காவல்துறையும் மருத்துவ உதவியும் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

அங்கு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், அந்த முயற்சிகள் வெற்றியடையாமல், சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவத்தின் தொடர்ச்சியாக, பொலிஸார் விரைவான விசாரணை நடத்தி, சம்பவத்திற்கு தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட பதின்ம வயது சிறுவனை மாலை 6.19 மணியளவில், அதாவது சம்பவம் நடந்த 10 நிமிடங்களுக்குள் அருகிலுள்ள வோர்ல் (Worle) கிராமத்தில் மடக்கி பிடித்து கொலை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

அமெரிக்காவை தவிர்த்துவிட்டு தங்க ஏற்றுமதியில் புதிய சாதனை படைத்த கனடாஅமெரிக்காவை தவிர்த்துவிட்டு தங்க ஏற்றுமதியில் புதிய சாதனை படைத்த கனடா

தற்போது, சிறுமியின் மரணத்திற்கான சரியான காரணத்தை உறுதிப்படுத்தும் வகையில் பிரேத பரிசோதனை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உள்ளூர் சமூகத்திலும், தேசிய அளவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

To Top