ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதாக சிட்னி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் சனுக்கா (Chanukkah) எனப்படும் யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
குறித்த தாக்குதல் பல மாதங்களாகத் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் பொலிஸ் காவலில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துயரச் சம்பவத்தையடுத்து சிட்னி நகரின் பொண்டாய் கடற்கரைப் பகுதிக்கு மக்கள் வர வேண்டாம் என சிட்னி பொலிஸார் தொடர்ந்து எச்சரித்துள்ளது.

மேலும் செய்திகள்
மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் முடக்கம்!
சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் பிரித்தானியா; குடியேற்ற எதிர்ப்பு கலவரங்களை தொடர்ந்து அரசு அதிரடி!
19 ஆண்டுகள் தாமதமாக வந்த இதழ்: பிரித்தானிய தபால் சேவை ஏற்படுத்திய வியப்பூட்டும் சம்பவம்!
சமூக ஊடகங்களில் சட்டவிரோத விந்து தான சேவைகள்: பெண்களுக்கு கடும் எச்சரிக்கை
ரயில் நிலையத்தில் இளைஞன் உடலுடன் கிடந்த சூட்கேஸ்: 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளியை தேடும் போலீசார்
Powered By Infox Cloud⚡





