Connect with us
Monday, April 20, 2026

விராட் கோலி, விசாகப்பட்டினம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் சாமி தரிசனம்

விராட் கோலி

டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட விராட் கோலி, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். 2027 உலகக் கோப்பை வரை அவர் தொடர்ந்து விளையாடுவாரா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்தத் தொடரில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்த கோலி, தொடர் நாயகன் விருதையும் வென்று, தன்மீது இருந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில், தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்ற விசாகப்பட்டினத்தில், கோலி ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவர் கோவிலில் தரிசனம் செய்த போதைப் பதிவு செய்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

ஐசிசி, மெதுவான பந்துவீச்சுக்காக இந்திய கிரிக்கெட் அணிக்கு அபராதம்; எவ்வளவு தெரியுமா?ஐசிசி, மெதுவான பந்துவீச்சுக்காக இந்திய கிரிக்கெட் அணிக்கு அபராதம்; எவ்வளவு தெரியுமா?

இந்த தரிசனம், கோலியின் நன்றி உணர்வும், ஆன்மீக நம்பிக்கையும் எதிரொலிக்கும் வகையில் பக்தர்கள் மற்றும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

To Top