Connect with us
Monday, April 20, 2026

பிரித்தானிய பிரதமரைவிட ஆட்கடத்தல்காரர்கள் திறமைசாலிகளா? – எதிர்க்கட்சி கடும் விமர்சனம்

பிரித்தானியாவின் புலம்பெயர்ந்தோர் திரும்ப அனுப்பும் கொள்கையில், அரசாங்கத்தைவிட ஆட்கடத்தல் கும்பல்களே திறம்பட செயல்படுவதாக எதிர்க்கட்சி கடுமையான விமர்சனம் முன்வைத்துள்ளது.

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்சுடன் ‘one-in, one-out’ என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, ஆங்கிலக் கால்வாய் வழியாக சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்கு திருப்பி அனுப்ப முயற்சித்து வருகிறார். இதுவரை 153 பேரை மட்டுமே இந்த ஒப்பந்தத்தின் கீழ் பிரித்தானிய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.

ஆனால், அதே நேரத்தில், ஆட்கடத்தல் கும்பல்கள் மறுதிசையில் செயல்படுகின்றன – அதாவது, பிரித்தானியாவிலிருந்து புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்கு அனுப்புகின்றன!

ஈரானை விட்டு வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அவசர அறிவிப்பு – தாக்குதல் அச்சத்தில் அதிகரிக்கும் பதற்றம்ஈரானை விட்டு வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அவசர அறிவிப்பு – தாக்குதல் அச்சத்தில் அதிகரிக்கும் பதற்றம்

விபரம் என்னவென்றால், வட ஆப்பிரிக்க நாட்டவர்கள் சிலர், சுற்றுலா விசாவில் (Visitor Visa) பிரித்தானியாவுக்கு வந்து, அங்கிருந்து ஆட்கடத்தல் கும்பல்கள் மூலம் பிரான்சுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்.

இந்த போக்கின் அளவு கவலைக்குரியது: ஒரு ஆட்கடத்தல் கும்பல் மட்டுமே ஒரு ஆண்டில் 243 பேரை பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு அனுப்பியுள்ளது – அரசு திருப்பி அனுப்பியதைவிட 90 பேர் அதிகம்!

சமீபத்தில், லண்டனைச் சேர்ந்த Uber Eats சாரதி Crook Madjid Belabes (53) பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவர் லொறிகள் மூலம் மக்களை பிரான்சுக்கு கடத்தி, 287,000 பவுண்டுகள் (ஏறத்தாழ ₹2.8 கோடி) சம்பாதித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவருக்கு சமீபத்தில் 10 ஆண்டு 9 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

பிரித்தானியாவில் புதிய குரங்கு அம்மை (mpox) திரிபு கண்டறிவு – ஆசியா பயணியிடம் அடையாளம்பிரித்தானியாவில் புதிய குரங்கு அம்மை (mpox) திரிபு கண்டறிவு – ஆசியா பயணியிடம் அடையாளம்

இந்நிலையில், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் பிலிப் (Chris Philp), “பிரித்தானியாவிலிருந்து மக்களை வெளியேற்றுவதில், பிரதமர் ஸ்டார்மரைவிட ஆட்கடத்தல்காரர்களே திறம்பட செயல்படுகிறார்கள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த விவகாரம், பிரித்தானியாவின் புலம்பெயர்தல் கொள்கைகள் மீதான நம்பிக்கையை மேலும் சோதிக்கும் நிலையில் உள்ளது.

To Top