Connect with us
Monday, April 20, 2026

இலங்கையில் மோசமான காலநிலை: வெளிநாட்டினருக்கு 7 நாட்கள் இலவச தங்கும் விசேட விசா வசதி

இலங்கையில் மோசமான காலநிலை

இலங்கையில் தற்போது நிலவும் மோசமான காலநிலை நிலைமைகளை கருத்தில் கொண்டு, வெளிநாட்டினருக்கான சிறப்பு விசா வசதிகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

காலநிலை காரணமாக வெளிநாட்டினரின் விமானங்கள் இரத்து செய்யப்பட்டிருக்கலாம் அல்லது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்ல முடியாமல் போயிருக்கலாம். அதேபோல, சிலரின் விசா காலாவதி ஏற்கனவே முடிந்திருக்கலாம்.

இத்தகைய சூழ்நிலைகளில் உள்ள வெளிநாட்டினர் அதிகபட்சம் 7 நாட்கள் வரை இலங்கையில் இலவசமாக தங்கியிருக்கலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த 7 நாட்களுக்கு எந்தவித தண்டப்பணமும் (ஓவர்ஸ்டே ஃபீஸ்) வசூலிக்கப்பட மாட்டாது.

ஆஸ்திரேலியாவில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்ஆஸ்திரேலியாவில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்

இந்த காலக்கெடுவுக்குப் பின்னர், தொடர்ந்து இலங்கையில் தங்க விரும்புவோர் குறுகிய கால அல்லது நீண்ட கால விசாக்களை சாதாரண நடைமுறைப்படி பெற்றுக்கொள்ளலாம். அல்லது, தங்கள் தாயகத்திற்கு அல்லது மற்றொரு நாட்டிற்கு புறப்பட்டுச் செல்லலாம்.

இந்த சிறப்பு ஏற்பாடு, காலநிலை காரணமாக எதிர்பாராத தாமதங்களை சந்திக்கும் பயணிகளுக்கு ஆதரவாக வழங்கப்பட்டுள்ளது.

To Top