வேத ஜோதிடத்தின் படி, குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். அவர் ஆண்டுக்கு ஒருமுறை ராசி மாற்றம் செய்வார். தற்போது குரு மிதுன ராசியில் பயணம் செய்கிறார். மறுபுறம் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியன் மாதந்தோறும் ராசி மாறுகிறார்; இப்போது அவர் கும்ப ராசியில் சஞ்சரித்து வருகிறார்.
ஹோலி பண்டிகைக்கு பின், சூரியன் மற்றும் குரு 120 டிகிரி கோணத்தில் அமையும் நிலையில் “நவபஞ்சம ராஜயோகம்” உருவாகவுள்ளது. மார்ச் 5ஆம் தேதி இந்த யோகம் உருவாகும் என கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் தொழில், செல்வம், மரியாதை போன்றவற்றில் முன்னேற்றம் காணப்படும் என ஜோதிடர்கள் கருதுகின்றனர். அனைத்து ராசிகளுக்கும் இதன் தாக்கம் இருக்கும் என்றாலும், குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் அதிக நன்மைகளைப் பெறுவார்கள் என கூறப்படுகிறது.
மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் சிறப்பான பலன்களைத் தரும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பாராட்டு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். முதலீடுகளில் லாபம் காணலாம். நிதிநிலை மேம்பட்டு, சொத்து சேர்க்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்களின் ஆளுமைத்திறன் மற்றும் சமூக மரியாதை உயரும். உயர்ந்த பதவியில் இருப்போரின் ஆதரவு கிடைக்கலாம். நீண்டநாள் நிலுவையில் இருந்த முடிவுகள் சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு பயணம் அல்லது வேலை தொடர்பான பயணங்கள் அதிகரிக்கலாம். கூட்டு தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மீன ராசி
மீன ராசிக்காரர்களுக்கு பரம்பரை சொத்து மூலம் ஆதாயம் கிடைக்கலாம். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் சாத்தியம் உள்ளது. தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் லாபம் தரக்கூடும். அதேசமயம் செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் காணலாம்.
பொறுப்புத் துறப்பு: மேலே வழங்கப்பட்ட தகவல்கள் ஜோதிட நம்பிக்கைகள் மற்றும் பொதுவான கணிப்புகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. இவை உறுதியான முடிவுகள் அல்ல. எந்த முக்கிய தீர்மானத்தையும் எடுக்க முன் சம்பந்தப்பட்ட நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
மேலும் செய்திகள்





