மேம்பாலத்துக்கு கீழ் மீட்கப்பட்ட சடலம்

பிரான்ஸ்

பிரான்சின் லீனா மேம்பாலத்தின் கீழே உள்ள ஆற்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் ஜனவரி 2 ஆம் திகதி வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

சடலம் மிதப்பதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாலத்தின் கீழே இருந்து சடலத்தை மீட்டனர்.

உயிரிழந்தவர் ஆஃகானிஸ்தானைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுவதுடன், பிரேத பரிசோதனைகளுப் பின்னரே மேலதிக தகவல்கள் தெரியவரும்.

சம்பவம் தொடர்பில் 7 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net