இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டி, கடந்த ஜனவரி 31ஆம் தேதி திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்களை குவித்து அசத்தியது. இந்திய அணிக்காக Ishan Kishan 103 ரன்களையும், Suryakumar Yadav 63 ரன்களையும் எடுத்திருந்தனர்.
பின்னர் 272 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி, 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக 4 ஓவர்கள் பந்துவீசிய Arshdeep Singh, 51 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், இந்தப் போட்டியில் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு மோசமான சாதனையையும் பதிவு செய்துள்ளார். இந்த விவரம் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சர்வதேச டி20 போட்டிகளில், ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்தபோதும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில், இதுவரை முதலிடத்தில் இருந்தவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் Alzarri Joseph ஆவார். அவர் கடந்த 2023ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 40 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
ஆனால், நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் 51 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங், அந்த சாதனையை முறியடித்து இந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம், டி20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஐந்து விக்கெட் எடுத்தபோதும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளராக அர்ஷ்தீப் சிங் புதிய மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார்.







